அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

13.9.13

தமிழகம் – சாதிய கணக்கெடுப்பு – முக்குலத்தோர் – தேவர்கள்



சாதிய கணக்கெடுப்பு பற்றி அனைத்து சாதியினரும் முன்னேற்பாடுகளுடன் அவர்களுடைய சாதிய சங்கங்களுடன் ஆலோசித்து  எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இருப்பார்கள். வழக்கம் போல முக்குலத்தோர் அதைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி அசால்டாக இருப்பார்கள்.
அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

முக்குலத்தோர் கள்ளர், மறவர், அகம்படியர் மூவரும் தேவர் என்ற பெயரிலேயே பதிவு செய்ய வேண்டும்.( இதனை படிப்பவர்கள் அனைவரும் உடனுக்குடன் எஸ்‌எம்‌எஸ் மூலமாகவோ,பேஸ்புக் மூலமாகவோ, ட்விட்டர் மூலமாகவோ செய்தியினை பரவ விடுங்கள். குறிப்பாக இளையவர்கள் தங்களது உறவினர்களுக்கும், கிராமத்து நண்பர்களிடமும் கூறி பதிவை தெளிவாகச் செய்யுங்கள்.)

கள்ளர், மறவர், அகம்படியர் – இவர்கள் முக்குலம் என்று அழைக்கப்படுகிறவர்கள். இவர்கள் warrior tribes – என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் காவல் தொழிலும், படைத்தொழிலும் அரசு தொழிலும் புரிந்தவர்கள். தமிழ் தொல் குடியினைச் சேர்ந்தவர்கள். அரசர்களாகவும், சிற்றசர்களாகவும், பாளயக்காரர்களாகவும்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டவர்கள். நாயக்கர்கள் காலத்திலிருந்து இந்த தமிழகத்தை காக்க போராடி வருபவர்கள் அதனால் அரசியல், பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டு வருபவர்கள். நாயக்கர், பிரிட்டிஷ்காரன், திராவிடன் என்று இன்று வரை தமிழகத்தை ஆளுமை செய்யும் தமிழர் அல்லாதவர்கள்,  தமிழகத்தின் பிற சாதிகள் பெரிதும் பயப்படும் அளவிற்கு அரசியல் பலம் உள்ளவர்கள்.

முக்குலத்தோர் எந்த  காலத்திலும் அரசியல் பலம் பெறக் கூடாது என்று சிறுபான்மைகள் எப்போதும் கவலைப் படும் அளவிற்கு இருப்பவர்கள். தமிழகம் முழுவதும், கோவையிலிருந்து கன்யாகுமாரி வரை மட்டுமல்ல கடல் கடந்தும் இலங்கை ,மலேசியா, சிங்கப்பூர் தென்னாப்ரிக்கா, பர்மா, என்று ஆங்கிலேய அரசால் ,போர்க்குற்றவாளிகளாகவும் , கூலித்தொழிலார்களாகவும் நாடு கடத்தப்பட்டவர்கள். இன்று அங்கெல்லாம் வேறூன்றி வாழ்பவர்கள் தமிழகத்தில் நேதாஜியின் இந்தியா இராணுவத்திற்கு பெருமளவில் பங்கேற்ற மிகப்பெரிய சுதந்திர போராளிகள் ( இதற்காகவே இந்தியா அரசாங்கம் இவர்களுக்கு தனிச்சலுகை தரவேண்டும்.)

இவை எல்லாவற்றையும் விட அரசியல் ரீதியாக எத்தனை தடைகள் போட்டாலும் தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிப்பது தேவர்களே. கவுன்சிலர்கள் முதல் மந்திரி வரை ,நீதிக்கட்சி முதல் திராவிடக் கட்சிகள்  வரை ஆட்சியை  தீர்மானிப்பது தேவர்கள்தான். 40 வருடத்திற்கு மேலாக reserve தொகுதியாக இருந்தாலும் சரி, தொகுதி மேம்பாடு என்று தேவர்கள் தொகுதிகளை அரசியல் சூழ்சியாக பிரித்தாலும் சரி, அனைத்து இடங்களிலும் குறைந்த பட்சம் 100 முதல் 1000 ஒட்டுகள் வரை வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பது தேவர்கள்தான். அம்மா முதல் அழகிரி வரை, இவர்களைப் பாதுகாப்பதும் தேவர்கள்தான்.

கள்ளர் மறவர் ,அகம்படியர் முக்குலமும் தேவர்கள் என்று ஒரு தலைப்பின் கீழ் வர வேண்டுமென்று முதன் முதலாக 10 வருடங்களுக்கு முன்பு முயன்ற போது, தஞ்சை கள்ளர்களும், சிவகங்கை அகம்படியர்களும் பலத்த எதிர்ப்பை தெரிவித்தனர். இன்றும் சில விஷ கிருமிகள் அவ்வாறே பிரசாரமும், அறிக்கையும் செய்வதாக அறிந்தேன். பிற சாதிகளிடம் காசு வாங்கிக் கொண்டு, நாங்களும் சாதிப்பற்றாளர்கள் என்று கூறிக் கொண்டு சம்மன் இல்லாமல் ஆஜராகும் இவர்களைப் பற்றி கவலைப் படாமல் முக்குலத்தோர் அனைவரும் தேவர்கள் என்றே போட வேண்டும். ( பிற சாதிகள் இப்படிப்பட்ட unwanted elements – களை பெரிதாக பாராட்டுவதும் இல்லை, கண்டுக்கொள்வதும் இல்லை , நாம் தான் இவர்களையெல்லாம் மேடைப் போட்டு சால்வை போர்துகிறோம்.)

கள்ளர், மறவர், அகம்படியர் இவர்கள் மூவரும் சத்திரியர்கள், இடங்கை வலங்கை என்ற சூத்ர வகுப்பில் இவர்கள் வருவதில்லை.. வணிகர்களும் இல்லை.அரசு தொழிலே இவர்களது தொழில். ராணுவம், வரிவசூல், காவல், (காவல் பலதரப்பட்டது குடிகாவல், ஊர்காவல் ,திசைகாவல் ,etc ).சேர்வை  என்பது வரி, சேர்வை என்பது தொழில் சம்பத்தப்பட்ட பட்டம். தாசில்தார், கமிஷ்னர் போன்று., அவ்வாறே கள்ளர்கள் பல பட்டங்கள் உண்டு. அம்பலம் அவற்றில் ஒன்று. அவை அந்தந்த பகுதியில் அவரவர்களது அரசு தொழில் சார்ந்தும், போரில் பெரும் பட்டங்களைச் சார்ந்தும், அவர்களது designation பொருத்தும்  பட்டங்கள் இருக்கும். அவ்வாறே மறவர்கள் தலைவர்கள் என்றும் தேவர்கள் என்றும் பட்டம் போட்டுக்கொள்வார்கள்.

 முக்குலத்தோருக்கும் அவரவர் பிரிவுகளில் உட்பிரிவுகளும் உண்டு.அது ஒரு கிராமத்தின் தலைவன் அல்லது தலைமை அவரை சுற்றி இருக்கும் சுற்றத்தைச் சேர்த்து  இணைத்து ஒரு organized institution ஆக தங்களது தொழிலை விரிவாக்கி  esatablish செய்து வருவது. அதுவே, கிளை என்றும், கோயில் என்றும், குலதெய்வம், என்றும் உள்ளது. இன்று உள்ளது போல mba , police , defence  அகாடெமி எல்லாம் கிடையாது. வழி வழியாக பயிற்சி தருவதுதான். சடங்கு முறைகளும் அந்தந்த  பகுதிக்கு ஏற்ப இருக்கும். ஆனால் இவர்கள் அனைவரும் இந்திரகுலம் என்னும் போர்க்கடவுள் வழி வந்தவர்கள் என்பதால் இவர்களை தேவர்கள் என்று அழைப்பார்கள். (தேவர்களை சமுதாய ரீதியாக மட்டம்தட்டவே, பார்பனும், நாயக்கனும், வெள்ளாளனும் செய்த ரீல்கள்தான் இந்திரன் அகலிகை கதை. சங்க இலக்கியங்களில் இந்திரன் போர்கடவுளாகவும் ,முருகன் தேவர்களது சேனாபதியாகவும் போற்றி, இந்திர விழாவாகவும் கொண்டாடப் பட்டு வந்துள்ளது, இன்றைய சித்திரை திருவிழாவும் அதன் வெளிப்பாடுதான். நாம் எந்த அளவிற்கு வரலாறு தெரியர்தவர்களாக இருக்கிறோம் எந்த அளவிற்கு தமிழகத்தின் வரலாறும் மறைத்தும் திரித்தும் இருக்கிறது!!)

கோவை, திருவண்ணாமலை, திருக்கோவிலூர் மைசூர் இவ்விடங்களில் சங்க காலம் தொட்டு அகம்படியர்கள் அதிகம் இருந்து வருகிறார்கள். ராஜா ராஜா சோழன், ராஜேந்திர சோழன் வெற்றி பெற்ற நாடுகளில் கொடும்பாளூர் வேளிர்கள்,அகம்படியர் படைகளை நிறுத்தி வந்ததாக ஈழம், கடாரம் சரித்திரம் கூறுகிது .சோழ சாம்ராஜியம் விரிவடைந்த காவேரி நாடுகளில்  அகம்படியர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். கொடும்பாளூர் வேளிர்கள், முத்தரையர்கள், போன்ற தொண்டை மண்டல தொல் குடிகள் என்ன்வானார்கள் என்று தெரியவில்லை. சேந்த மங்களம் போரைப்பற்றிய ஒரு விரிவான ஆராய்சி பல சரித்திர உண்மைகளை துரோகங்களைக் கூறலாம்.

இன்றைக்கு தமிழகத்தில் எஞ்சி நிற்கும் சத்திரிய தொல் குடி முக்குலத்தோராகிய கள்ளர், மறவர் அகம்படியரே. யார் வேண்டுமானாலும் தங்களி ஆண்ட பரம்பரை என்று கூறிக் கொள்ளட்டும், இந்த உளறல் களையெல்லாம் பெரிதாக நினைக்காமல் அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் நமது இளைய தலைமுறைகளுக்கு நல்வாழ்வு அமைய தேவர்கள் என்றே இனி எக்காலமும் முக்குலத்தோர் பதிவு செய்யுங்கள்.
. இப்பொழுது தேவர்கள் என்று பதிவு செய்ய உங்களில் எவருக்கேனும் தடை உள்ளதோ?

வாழ்க தமிழர், வளர்க தமிழினம்

நன்றி: மஞ்சு கணேஷ்