அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

19.2.14

தியாகத்தேர்


மருதுபாண்டியர் புகழ் பாடும் போது தியாகத்தேர் குறித்து பதிவு செய்வது மிகவும் அவசியமானது. காளையார்கோயில் உள்ள பழைய கோபுரத்திற்குத் தென்புறம் புதிதாகத் பெரிய கோபுரம் கட்டிமுடித்து குடமுழுக்கு விழா செய்ய புதிய தேர் ஒன்றை செய்ய மாளக்கண்டானைச் சேர்ந்த குப்பமுத்து ஆசாரி என்னும் மரச்சிற்பக்கலைஞராவார்.தேர் செய்யும் பணியை அவரிடம் ஒப்படைத்தனர்.காளையார்கோயிலிலேயே தங்கி வேலையைத் தொடர்ந்தார்.தேர் செய்ய தொடங்கும் முன் முதலில் பிள்ளையார் உருவைச் செய்வதுதான் சிற்பிளின் வழக்கம். அப்படி செதுக்கும்போது ஒச்சம் (குறைபாடு) ஏற்பட்டுவிட்டது.அப்படி நேர்ந்தால் தேருக்குரிய மன்னருக்கு ஆபத்து என்பது சிற்பிகளிடையே ஒரு நம்பிக்கை. ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் தேரிலக்கண முறைப்படி, கண்டவர் வியக்கும் வண்ணம் நடமாடும் அழகுதேவதையாக சிற்பி தேரை உருவாக்கிவிட்டார் குப்பமுத்து ஆசாரி.

வெள்ளோட்டத்திற்குக் தயாரானது தேர்.தேரை வடம்பிடிக்க மக்கள் திரண்டனர்.மருதுபாண்டியர்களும் வந்துவிட்டனர். பெரிய மருதுபாண்டியர் வெள்ளை வீசி , தேர் ஓடத் தயாரானது.அருகில் தயங்கியபடி நின்ற குப்பமுத்து ஆசாரியிடம் என்ன என்று வினவினார்? பெரிய மருதுபாண்டியர்.
தேர் செய்யும்போது ஒச்சம் ஏற்பட்டுவிட்டது அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றார்.என்ன பரிகாரம் என்றார் பெரிய மருதுபாண்டியர்.தேர் நிலைக்கு வரும்படி மட்டும் முத்திரை மோதிரமணிந்து செங்கோல் தாங்கி நான் அரசனாக இருக்க வேண்டும். இதை அரண்மனை அனுமதித்தால் தேரோட்டம் விக்கனமின்றி நடந்தேறும் என்றார்.

சிற்பி சிம்மாசனத்திற்கு ஆசைப்பட்டு சிற்பி அவ்வாறு கூறவில்லை என்றெண்ணிய பெரிய மருதுபாண்டியர் உடனே முத்திரை மோதிரத்தை அவர் விரிசல் அணிவித்து செங்கோலைக் கையில் கொடுத்துவிட்டு "இன்றுமுதல் நீர்தான் சிவகங்கைச் சீமைக்கு அரசர்" என்று அறிவித்தார்.
மக்கள் அனைவரும் ஆத்திரப்பட்டனர்.பெரிய மருதுபாண்டியர் கையைக் காட்டியதும் மக்கள் ஆத்திரம் அடங்கியது.

மன்னராக அறிவிக்கப்பட்ட குப்பமுத்து ஆசாரி தேரில் எறி வடந்தொடலாம் என்றதும் பெரிய மருதுபாண்டியர் வடந்தொடுக்க, சின்ன மருதுபாண்டியர் வெள்ளை வீச தேர் புறப்பட்டது.பாட்டாளியைப் பாராளும் வேந்தராக்கிவிட்டார் பெரிய மருதுபாண்டியர். எதிர்பார்த்ததை விட வேகமாக நகர்ந்தது தேர்.முழுத்தேராகையால் சுற்றி வரும்போது 'ஆனைமடு' எனும் திருக்குளத்தின் நீர் குமிழியிட்டதாம்.

அந்த ஆனைமடு தேரோட்டத்தை கண்டு கும்மாளமிட்டது போலிருந்ததாம் .கண் இமைக்கும் நேரத்தில் செங்கோலுடன் மன்னராகத் தேரில் வந்து கொண்டிருந்த சிற்பி திடீரென தேரின் முன்விழ சக்கரத்தில் சிக்கினார் .அவரால் செய்யப்பட்ட தேர் அவர் உயிருக்கு உலை வைத்தது.ஆனால் அது அவர் விரும்பி ஏற்றுக்கொண்டது.

உயிர் பிரியும் தருவாயில் பதிவிரதை வந்த மன்னரிடம் "அரசே ! தேர் செய்யும்போது ஒச்சம் ஏற்பட்டுவிட்டது.அது நாட்டின் அரசனுக்கு ஆபத்து என்ற எங்களுக்கிடையே உள்ள நம்பிக்கையின்படி அச்சமடைந்தேன்.அதற்கு பரிகாரமாகத்தான் தேரோட்டம் துவங்கும்முன் மன்னர் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கக் கேட்டேன்.மற்றவர்கள் என்ன நினைத்தாலும் சரி எல்லோரும் இந்நாட்டின் உயிர் என மதிக்கும் தங்களுக்கு இனி ஆபத்து வராது அரசே! "என்று திணறித் திணறிப் பேசி உயிரைவிட்டார் குப்பமுத்து ஆசாரி. அதனால் அந்த தேரை தியாகத்தேர் என்று இன்று வரை போற்றுகின்றனர்.

இவ்வாறு மன்னர் உயிர் காக்கத் தன்னையே பலிகொடுத்த சிற்பியின் குடும்பத்தினருக்கு மருதுபாண்டியர்கள் மாளக்கண்டான், வெற்றியூர், சிறுவயல் முதலிய ஊர்களில் நிலங்களை மானியமாகவிட்டனர். வாழ்க மருதுபாண்டியர் புகழ்.வளர்க முக்குலத்தோர் புகழ்.

14.2.14

தமிழ்புலி மருதரசர்

ஒருமுறை புலிக்குட்டிப்புலவர் எனும் ஒரு புலவர் மருதுபாண்டியர் அரண்மனை நோக்கி வந்தார்.புதிதாக பணியிலிருந்த வாயிற்காப்போன் "அரசரிடம், யார் வந்திருப்பதாகச் சொல்ல? என்று கேட்டான்.
புலவர் அதட்டலாகவும் ஏளனமாவும் "அரசனிடம் புலி வந்திருக்கிறதென்று சொல் "என்று சொல்லி அனுப்பினாராம். வாயிற்காப்போனும் அவ்வாறே அரசனிடம் தெரிவித்தான்.பெரிய மருதுபாண்டியர் இதற்கெல்லாம் அசறுபவரா? அவரும் 'இங்கு வேல் இருக்கிறதென்று சொல்லி, வரச்சொல் என்றாராம்.முத்து வேலுக்கவிராயர் தம் அவையில் இருப்பதைக் குறிப்பால் உணர்த்தினார் பெரிய மருதுபாண்டியர். மன்னர் புலியை அடக்குவதில் மட்டும் வல்லவரல்லர் தமிழிலும் புலி எனப் புரிந்து கொண்ட புலவர் தம் செருக்கடங்கினார்.

நன்றி: மு.இரா.கலைச் செல்வன்

4.2.14

முதல் அகமுடையார் யார் தெரியுமா?



இறைவனான சிவபெருமானுக்கு அகப்பணி செய்து கையிலாயத்தின் நிர்வாகத்தை மற்றும் காவலை ஏற்று நடத்திவரும் மற்றும் பெருமதிப்பிற்குரிய ஈஸ்வர பட்டம் பெற்றவருமான திரு நந்தீஸ்வரர் என்ற நந்தி தேவர் தான் அது.


திருவோணம் - அகமுடையார் பண்டிகை!

(கேரளாவில் கொண்டாடப்படும் திருவோணம் பண்டிகைக்கு காரணமான மாவலி சக்கரவர்த்தி, அகமுடையார் குலத்தில் உதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

மாவலி மாவேந்தன்:
----------------------------

மாவலி யென்பானொரு மாபெருஞ் சேரவேந்தன், மானமிகுந் தமிழ மறவனன்றோ.
பாவலரும் பின்னரே பகையொடு சேர்ந்தவனைப்
பழித்துவரும் மடமைத் திறமும் நன்றோ

நாவலந் தீவிலெங்கும் நாயகச்செங் கோலோச்சி
நன்மை பலவுஞ் செய்த காவலனே
யாவரும் எதிர்க்கினும் யானைத்திரளைக் கொல்லும்
யாளிபோல் வெல்லும் பெருமாவலனே

தேவருக் கென்றும்பல தீமைசெய்து வந்ததால்
திருமாலின் அடியினால் தீர்ந்தான் என்பார்
தேவுரையே மாற்றிலும் திருப்பற்று வாய்மை வண்மை
திடமாயவன் கொண்டதைத் தேர்ந்து முன்பார்

மாவலி மரபிலே வந்த சீர்த்தியைக் கிள்ளி
வளவனுந் தேவியாக மணந்திருந்தான்
மாவலி மருகராம் வாணகோ வரையரும்
வளவன்கீழ்ச் சிற்றரசாய் இணைந்திருந்தார்

ஆரியத்தை யெதிர்த்த அருந்தமிழ் வேந்தரெல்லாம்
அசுரரென்றே பண்டைநாள் அழிக்கப்பட்டார்
சீரிய அறிவியல் செழித்துவரு மிந்நாளும்
செந்தமிழ்த் தலைவரே பழிக்கப்பட்டார்

திருவோண நாளிலின்றும் குடிகளின் நலங்காணத்
திரும்பிவரும் மாவலி என்று சொல்வார்
அருளோடும் அவன்அந்நாள் அரசுபுரிந்த வுண்மை
அறிவிக்கும் இதுவொன்றே கண்டு கொள்வீர்

- 'மொழிஞாயிறு' ஞா. தேவநேயப் பாவாணர்

3.2.14

மன்னார்குடி கோட்டைகளை கைப்பற்றிய அகமுடையார்


சேர நாடு சிதைந்துபோது நாட்டில் ஏற்பட்ட குழப்பம் மக்கள் விரக்தியில் நாட்டை விட்டு வெளியேறி விரும்பிய பகுதியை அடைந்தனர் அப்படி காஞ்சிபுரம் (வேங்கடம் ) வாழ்ந்த அகமுடையாரில் ஒரு பகுதியினர் தெற்கே நகர்ந்தனர் அவர்கள் அடைந்த இடம் தஞ்சை வந்து கோட்டைகளை கைப்பற்றினர்

அதன் முதல் தளம் தம்பிகோட்டை, மற்றொரு குழுவினர் கோவில்வெண்ணி க்கு அருகில் இரும்பு தலை கைப்பற்றினர் ; இவர்களுக்கு இரும்புதலை அகமுடையார் என்று பெயர் பெற்றனர்..

மன்னார்குடி தெற்கே உள்ள அகமுடையார் கோட்டைகள் :
1. பரவாக்கோட்டை
2. உள்ளிக்கோட்டை
3. திருமக்கோட்டை
4. கூப்பாச்சிகோட்டை
5. அலங்க்கோட்டை
6. ஆவிக்கோட்டை
7. சுந்ததரக்கோட்டை
8. தளிக்கோட்டை
9. கண்டிதம் பேட்டை
10. இலக்கணாம் பேட்டை
11. வல்லன்குடிகாடு
12. படப்பகாடு
13. மேலதிருப்பாலகுடி
14. கீழதிருப்பாலகுடி
15. சீதாராம்( வடக்கு,தெற்கு )
16. வடசேரி
17. மேலவாசல்
18. கருவபிள்ளை நத்தம்

இந்த் பகுதிகளில் அடர்த்தியாகவுள்ள அகமுடையார் சமுதாயம் இவர்களை அன்றி குடியான சாதி வேறு யாரும் இல்லை

நாலாம் சாதியான அம்பலக்கார்,பறையர் ,பள்ளர் போன்ற சாதியை சேர்ந்தவர்கள் இடம்கொடுத்து விவசயகூலிகளாக இங்கு குடியமர்த்தப்பட்டு வாழ்கின்றனர்

2.2.14

அகமுடையார் நாடுகள்

இரும்பு தலை அகமுடையார் :

இரும்பு தலை அகமுடையார்கள் சிக்கப்பட்டு கிராமத்தை மையமாக கொண்டு ஆதலூர், பெரிய கோட்டை, முன்னாவல் கோட்டை, கருப்ப முதலி கோட்டை , கோவில்வெண்ணி, நீடாமங்கலம், கடம்பூர், ஓரத்தூர் கோட்டையூர், கோனாப்பட்டு, செட்டிசத்திரம், பூவானுர், ராயபுரம், சித்தமல்லி, லாயம், கீழப்பூவாளூர், காளச்சேரி போன்ற கிராமங்களுக்கு பரவினர். இரும்பு தலை அகமுடையார் மற்றும் பதினெட்டு கோட்டை அகமுடையார் என இரு பெரும் பிரிவுகளாக இருந்தனர்..

அகமுடையார் நாடுகள் :
பதினெட்டு கோட்டைப்பற்று நாடு
புண்ணியரசு நாடு (பட்டுக்கோட்டை)
பதினோறு நாடு (பேராவூரணி)
ஐந்து நாடு
இரும்புத்தலை நாடு
அஞ்சுவண்ண பட்டுகோட்டை நாடு
ஆண்டான்குடிநாடு
ஆலங்குடி நாடு
கோனூர் நாடு
அய்யலூர் நாடு
குளமங்கல நாடு

மராட்டிய மன்னன் காலத்தில் இவர்களுக்கு பிள்ளை என்ற பட்டம் சூட்டபட்டுள்ளது, இதன் காரணமாக பட்டுகோட்டை முசுன்குந்த நாட்டு வெள்ளாளர் அவர்களை பிள்ளை என்று அழைப்தில்லை மாறாக வேளார் என்று தான் பெருக்கு பின்னால் போட்டுகொள்கின்றனர்.

யார்?



1772 ல் முத்துவடுகநாதர் இறந்த பின்பு வேலு நாச்சியாரின் உயிரையும் , மானத்தையும் கடைசி வரை காத்தது யார் ?

சிவகங்கை சீமையில் இருந்து டோலி மூலம் திண்டுக்கல் வரை வேலு நாச்சியாரை பாதுகாப்பாக கொண்டு சேர்த்து , மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் அறிமுகப்படுத்தி அடைக்கலம் தந்தது யார்..?

சிவகங்கை சீமையை மீட்டெடுக்க ரகசியமாக புரட்சி படை திரட்டியது யார்..?


வேலு நாச்சியார்க்கு 1772 முதல் 1780 வரை திண்டுக்கல்லிலும் , விருபாட்சியிலும் போர் பயிற்சி தந்தது யார்..?

சிவகங்கை சீமையை மீட்க போதிய பணம் இல்லாத காரணத்தால் , திருவிதாங்கூர் மன்னர் நடத்திய போட்டியில் வேங்கை புலியை வென்று , அதன் மூலம் கிடைத்த பணத்தை ஆற்காடு நவாபிடம் கொடுத்து சிவகங்கை சீமையை மீட்டது யார்..?

வெள்ளையரால் தோற்கடிக்கப்படாத ஒரே ராணி வேலு நாச்சியார் என்ற பெருமைக்கு காரணம் யார்..?

அவரை அறிவாலும் , வீரத்தாலும் வழி நடத்தியது யார்..?

தன் நாட்டையும், அரச பதவியையும் வேலு நாச்சியார் ஒப்படைக்கும் அளவிற்கு அறிவு,வீரம்,நிர்வாகம்,போர் திறன்,ஆளுமை அனைத்திலும் சிறந்து விளங்கி உயர்ந்திருந்தது யார்..?

இன்று வரை சிவகங்கை என்னும் சமஸ்தானம் இருப்பதற்கு காரணம் யார்..?

இவர்கள் இல்லையென்றால் 1772ம் ஆண்டோடு சிவகங்கையும்,அதன் அரச வம்சமும் முடிவுக்கு வந்திருக்கும்.

நன்றி மறப்பது நன்றன்று.

1.2.14

பதினொரு நட்டார்கள்

வாழ்க மருது புகழ் வளர்க

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன தவறு குலம் காத்தவனே கொள்கை பிடிப்போடு புறபடுவோம் படை நடத்து பார் ஆள்வோம் பதினொரு நாட்டு சிங்கங்களே

கோட்டை காத்தவர்கள் குலம் வாழ கொள்கை பிடிப்போடு குடி காத்தவர்கள் பதினொரு நட்டார்கள் வீர அகமுடையர் மக்கள் இவர்கள் உடல் உறுதி மலையோடும் மோது ஆற்றல் கொண்ட பதினொரு நட்டார்கள் ; நாடு காப்பதில் எல்லை சாமி போல வாழ்ந்த வீர அகப்படை சென்ற இடம் எல்லாம் வெற்றி வீர நடை நாடு குடி காத்த நல்லவர்கள் , வீரம்,மானம், காவல் இம் மூன்றையும் மூச்சாக கொண்டனர் பதினொரு நாட்டு அகமுடையார்..

பதினொரு நட்டார்கள் : {அகமுடையார் காவல் நாடுகள்}

1. ஆவணம்
2. நெடுவாசல்
3. வேம்பங்குடி
4. களத்தூர்
5. தென்னங்குடி
6. வீரியனங்கோட்டை
7. குருவிக்கரம்பை
8. நாடியம்
9. துறையூர்
10. முடப்புளிக்காடு
11. ஆண்டார்கோட்டை

நன்றி மறப்பது நன்றன்று

1772 ல் ஆங்கிலேயர் மற்றும் ஆற்காடு நவாபின் கூட்டுப்படைகளால் மன்னர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பிறகு, சிவகங்கையை ஆற்காடு நவாப் தன் வசமாக்கினார். சிவகங்கை சீமையின் பெயர் "ஹுசைன் நகராக" மாற்றப்பட்டது.  1772 முதல் 1780 வரையிலான 8 ஆண்டுகள் ஆற்காட்டு நவாபின் மகனான அமரா அல் உமர், ஹுசைன் நகரான சிவகங்கையை ஆட்சி செய்தார். பின்பு 1780 ம் ஆண்டு மாமன்னர்களின் கூட்டுப்புரட்சி படை சிவகங்கையை மீண்டும் கைப்பற்றியது. பின்பு ராணி வேலு நாச்சியார் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் முழு மனதோடு ஆட்சிப்பொறுப்பை மருது பாண்டியர்களிடம் ஒப்படைத்தார்.  1780 முதல் 1801 வரை மாமன்னர்கள் சீரும் சிறப்புமாக சிவகங்கையை ஆண்டனர். அந்த 21 ஆண்டுகள் சிவகங்கையின் பொற்காலமாகவே கருதப்பட்டு வருகிறது.

வரலாறு மறைக்கப்படுவதும் , திரிக்கப்படுவதும் ஏனோ???

நன்றி மறப்பது நன்றன்று..!!!