அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

18.7.13

ராஜராஜ சோழனின் தாயார் அகமுடையார்


கல்வெட்டுகளில் அகமுடையாரை பற்றிய கல்வெட்டு சின்னமனூர் கல்வெட்டில், “பிள்ளை குலசேகர மாவலி வானாதிராய அகம்படிய முதலி சிங்க தேவன் ” என்று குலசேகர மாவலி வானதிராயரை பற்றி
குறிப்பிடுகிறது.

வானர் என்ற மன்னர் குலத்தோர் புகழ் பெற்ற சேர மரபினர் ஆவார். மூவேந்தருடனும் மணஉறவு பூண்டவர். கரிகால சோழனின் மனைவியும் வானர் குல பெண்மணியான, ராஜ ராஜ சோழனின் அக்காவின் கணவருமான வந்தியதேவன் இந்த வானதிராயர் குலத்தாவர். அதுபோலவே, ராஜராஜ சோழனின் தாயாரான, வானவன்மாதேவியும் இக்குலத்தையே சார்ந்தவர். மேலும், பொன்னியின் செல்வனில் குறிப்பிடப்படும் பழுவேட்டரையர்களும் அகமுடையார் என்பது குறிப்பிடதக்கது.

வானவன், சேரன், மலையன் என்றும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள். காளியை குலதெய்வமாக கொண்ட போர் மறவர் குலமான இவர்கள் சோழர்களுக்கு அநேக வெற்றிகளைப் பெற்றுத்தந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை (வானாதிராய மதுரை), இராசகம்பீரம் (வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக அகமுடையரே வாழ்கிறனர். சின்னமனூர் அகமுடைய பனந்தாரன் (வானாதிராயன்), பந்தளம் (அகமுடைய பனந்தார ராம வர்மன்) சுவாமி ஐயப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே. இருவருக்கும் இன்னும் திருமண உறவு உண்டு.

மாமன்னர் கட்டிய ராஜகோபுரம்

மாமன்னர் ஸ்ரீ.மருது பாண்டியர் தெய்வங்களால் கட்டப்பட்ட சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ஆலயத்தின் ராஜகோபுரம் 1959 ஆம் ஆண்டு புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட விவரம்.