அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

10.12.14

முக்குலத்தோர் சங்கமாக உருமாறிய அகமுடையார் சங்கம்!

அகமுடையார் சங்கமானது முக்குலத்தோர் சங்கமான வரலாறு!

1926 ல் திருத்துறைப்பூண்டியில் முதல் அகமுடையார் சங்க மாநில மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாடு உருவாக,  கரந்தை திரு. உமாமகேசுவர பிள்ளை, பட்டுக்கோட்டை திரு. நாடிமுத்து பிள்ளை, திருத்துறைப்பூண்டி திரு. ராஜகோபால் பிள்ளை, நாகப்பட்டினம்-அந்தணப்பேட்டை திரு. திருஞானசம்பந்த பிள்ளை ஆகிய நால்வரும் முக்கிய பங்கு வகித்தனர்.

பிறகு, அகமுடையார் சங்க மாநில மாநாடு 1929ல் பட்டுக்கோட்டையிலும், 1931ல் மதுரையிலும், 1932ல் இராமநாதபுரத்திலும் நடந்தது.

அனைத்து மாநாட்டிலும் அந்தெந்த பகுதியை சார்ந்த பொதுவானதொரு சிறப்பு விருந்தினரை அழைப்பது வழக்கமாக்கி கொண்டிருந்ததால், இந்த நான்காவது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சேதுபதி மன்னர் வகையினரான, நீதிக்கட்சி அமைச்சரான திரு. சண்முகராஜ நாகநாத சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாநாட்டில் சேதுபதி வைத்த கோரிக்கையை ஏற்று பின்னால் திரு. சிவனாண்டி சேர்வையின் முன்னெடுப்பால் அகமுடையார் மாநில சங்கமானது, முக்குலத்தோர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது.

டிசம்பர் மாதம் 1933 ல் நடைபெற்ற சென்னை மாநாட்டில், மாநில அகமுடையார் சங்கமானது, முக்குலத்தோர் சங்கமென முழுமையாக உருமாற்றம் பெற்றது. அந்த மாநாட்டின் பெயரானது மூவேந்தர் குல மாநாடு என பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இன்றைக்கு பவளவிழா கண்டு இயங்கி வரும் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்கத்திற்கான விதையானது, 1926 ல் உருவாக்கப்பட்ட மாநில அகமுடையார் சங்கத்திடமிருந்து கிடைத்தது என்பது தான் மறுக்க முடியாத, மறக்கடிக்கப்பட்ட வரலாறு. இந்த விருட்சத்தின் பலனான நிழலானது, விதைக்கும் - வேர்க்கும்  கிடைக்கவே இல்லை என்பதுதான் வருத்தமான விசயம்.

27.10.14

அக்டோபர் 24க்கு பின்னாலுள்ள குழப்பங்கள்!

தமிழ் தேசியம் காத்த மாமன்னர் மருதுபாண்டியரின் 213வது நினைவேந்தல் நாளை அனுசரித்து கொண்டிருக்கும் அனைவரும் காளையார்கோவில் நினைவிடத்திற்கும், திருப்பத்தூர் நினைவிடத்திற்கும் உள்ள தொடர்பை விளக்க வேண்டும்.

01. காளையார்கோவிலில் யாருடைய உடல் உள்ளது?

02. மாமன்னர் மருதுபாண்டியர்களை தூக்கிலிட்ட பிறகு தலைகள் துண்டிக்கப்பட்டனவா?

03. காளையார்கோவிலில் உடலே இல்லையா?

04. காளையார்கோவிலில் வெறும் தலை மட்டும் தான் உள்ளதா?

05. காளையார்கோவிலில் ஆசாரியின் உடல் என சிலர் சொல்வதின் உண்மை என்ன?

06. திருப்பத்தூரில் புதைக்கப்பட்ட உடல்கள் யாருடையது?

07. திருப்பத்தூரில் புதைக்கப்பட்ட உடல்களில் தலைகள் இருந்ததா?

08. அக்டோபர் 24க்கும் அக்டோபர் 27க்கும் உள்ள தொடர்பு என்ன?

09. மாமன்னர் மருதுபாண்டியர்களை தூக்கிலிடப்பட்ட நாளான அக்டோபர் 24ம் தேதியை தானே நாம் அனுசரிக்க வேண்டும்?

10. அக்டோபர் 27ம் தேதியை அனுசரிப்பதன் உள் அரசியல் என்ன?

இந்த பத்து கேள்விகளுக்கும் சரியான விடை தெரியாமல் மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தலுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து மட்டும் என்ன பயன்?

6.9.14

ஓணம் பண்டிகைக்கும் அகமுடையாருக்கும் உள்ள தொடர்பு!


தமிழகத்தின் மிகப் பழமையான போர்க்குடிகளில் அகமுடையார்களும் அடங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மறத்தன்மை என்பது மிகவும் உயர்வான ஒன்றாக வரலாற்றில் போற்றப்பட்டுள்ளது. இந்தியப் புராணங்களில் முக்கியமான ஓர் அசுர குல வேந்தன் மகாபலி ஆவான். சோபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு மகாபலி மன்னன் ஆண்டதாகக் கருதப்படுகிறான். தக்காண பீடபூமி பகுதியில் இவ்வூர் இருந்ததாகக் கருதப்படுகிறது. இங்கிருந்து துளு மொழி வழங்கிய கர்நாடகக் கடற்கரைப் பகுதி வரை ஆண்டதாகவும், வாமன அவதாரம் எடுத்து, விஷ்ணு இம்மன்னனை பாதாள உலகிற்கு அனுப்பியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இன்றும் கேரளத்தில் தங்கள் குல முதல்வனாகிய மகாபலி பாதாள உலகத்துக்கு அனுப்பப்பட்ட நாளாகிய ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளை விழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்றைக்கு ஒருநாள் மட்டும் மகாபலி தமது நாட்டைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் பாதாள உலகம் சென்றுவிடுவதாக கருதப்படுகிறது. இந்த ஓண நாளை 'வாமன ஜெயந்தி' என்று இந்து மதப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ்நாட்டிலும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து 15-16ஆம் நூற்றாண்டு வரை வெவ்வேறு பகுதிகளில் 'மகாபலி வாணாதிராயர்கள்' என்ற சிற்றரச வம்சத்தவர் ஆண்டுள்ளனர். இவர்கள் தம்மை வெட்டுமாவலி அகம்படியர் என்று கூறிக்கொண்டுள்ளனர் (ஆதாரம்: கணக்கன் கூட்டத்தார் பட்டயம், பக்கம் 233-243, கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், பதிப்பாசிரியர்: செ. இராசு, தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1991). இந்திய வரலாற்றில் மகாபலி சக்கரவர்த்தி மறைக்கமுடியாத ஒரு வரலாற்றுப் பாத்திரமாவார். பாரத நாடு என்ற பெயரையே 'மகாபலி தேசம்' என்றுதான் சொல்ல வேண்டும் என்ற கோரிக்கைகூட ஒரு காலகட்டத்தில் எழுந்ததுண்டு. மகாபலியிடமிருந்து, வாமன அவதாரமெடுத்து விஷ்ணு நாட்டைப் பற்றிக் கொண்டார் என்ற கதையின் பின்னணி சுவையானது. மகாபலி 99 அஸ்வமேத யாகங்கள் செய்து முடித்து விட்டான். 100ஆவது அஸ்வமேதம் செய்து முடித்துவிட்டால் இந்திர பதவியை அடைந்து விடுவான். எனவே, மகாபலியின் இந்த முயற்சிக்கு இடையூறு விளைவிக்கத் திட்டமிட்ட இந்திரன் விஷ்ணுவைத் தூண்டிவிட்டு நினைத்ததைச் சாதித்துக் கொண்டான் என்பதே புராணம். இந்திர பதவியை மயிரிழையில் தப்ப விட்டுவிட்டாலும்கூட மகாபலி வம்சத்தவர்கள் பலீந்திரன் வம்சத்தவர்கள் என்றே தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் (அயோத்தியை ஆண்ட ராமன் வம்சத்தவரும், குருக்ஷத்திரத்தை ஆண்ட பாண்டவ கெளரவ வம்சத்தவர் உள்ளிட்ட மன்னர்களும்) சூரிய, சந்திர குலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை சோழர்கள் சூரிய குலத்தவர்கள். பாண்டியர்கள் சந்திர குலத்தவர்கள். சேரர்களும் சந்திர குலத்தின் கிளைக் குலத்தவரே. சேரர்களில் உதியன் சேரலாதன் மகாபாரதப் போரில் இறந்த சந்திர குல வீரர்களைத் தனது முன்னோராகக் கருதினான் என்று சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். இவர்களைத் தவிர வரலாற்றில் பரமார மன்னர்கள் போன்றவர்களும், செளகான் போன்ற ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர்களும் அக்கினி குல க்ஷத்திரியர்களாகத் தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளகவும் வாமணன் அவதரித்ததும் அன்று தான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைகாஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"

- மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)

“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே”

- பெரியாழ்வார் திருமொழி 6

“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

- திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2

இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகையென (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகைபற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலெ எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர்.கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆண கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள்மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்தப் பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காகத் தனது தலையையேக் கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன்தலையில் கால் வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதளத்திலிருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் மன்னன். அதன்படி, ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.

தமிழ்க் கல்வெட்டுகளில் வர்ம சிகிச்சை முறை, ‘அங்க வைத்தியம்' அல்லது ‘அங்க வைஜ்யம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய நடைமுறைப்படி அங்க வைத்யக் கல்வியும் பயிற்சியும் அரச குலத்தார்க்கும் அதிகார வர்க்கத்துக்கும் மட்டுமே உரியவையாகப் பராமரிக்கப்பட்டு இரகசியம் காக்கப்பட்டு வந்திருக்க வேண்டு மென்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அகம்படியர் மரபினரும், சத்திரிய - பிராம்மண வர்ணக் கலப்பில் தோன்றிய உயர்குடி மருத்துவர்களுமே அங்க வைத்யர்களாக இருந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் ’வெட்டுமாவலி அகம்படியர்’ சமூகத்தவர் தமது பூர்வபந்தங்களைத் தொடர்ந்து வந்ததால் ‘குடி படை'களாக நீடித்தனர். ஆனால், கேரள மாநிலத்தில் சாமந்தச் சிற்றரசர்களின் மரபைப் பின்பற்றி நம்பிதிருப்பாதம் (நம்பூதிரிபாத்) பிராம்மணர்களுடன் சம்பந்த உறவு கொண்டு முதன்மையான அதிகார வர்க்கமாக உருவெடுத்த அகம்படிய நாயர் சமூகத்தவர், தன்வந்திரியை மூலவராகக் கருதும் ஆயுர்வேத மருத்துவத் துறையின் ஒரு பிரிவாக வர்ம சிகிச்சை முறையை மாற்றினர்.

இப்படியான அகமுடையார்களுக்கு சம்பந்தப்பட்ட திருவோணத்திருநாளை வெறும் கேரள பண்டிகையாக மட்டும் சிறுமைப்படுத்தி வைத்திருப்பது வேறுயாருமல்ல, அகமுடையார் சமூகத்தினரும் தான் என்பதை இனியாவது புரிந்து கொள்வோம். வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

அனைவருக்கும் திருவோணத்திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நன்றி & ஆதார தரவுகள்: தமிழினி இதழ், திண்ணை, தமிழ் விக்கிபீடியா, கணக்கன் கூட்டத்தார் பட்டயம், கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள்.

28.8.14

சேரலப் பேரரசு:


'சேர்வை' என்ற பட்டத்தின் முன் வடிவம் 'சேரல்' என்பதே! சேரல மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன்னும் பின்னும்
*சேரலாதன்
*இளஞ்சேரல்
*பெருஞ்சேரல்
*நெடுஞ்சேரல்
என்று பட்டத்தை மாறி மாறி இட்டு வழங்கி வந்திருப்பதை
காண முடிகின்றது.

சேரல நாடு - "சேரலம்" இன்றோ அது திரிந்த நிலையில் கேரளம்! கேரளா!

மன்னர் சூடிய 'சேரல்' பட்டம் பின்னாளில்
சேரல்காரர்!
சேரலக்காரர்!
சேர்லக்காரர்!
சேர்வக்காரர்!
பின்பு 'சேர்வை' எனவாகி நிற்கின்றது!

சேரலத் தமிழ் 'மலையளம்' என தனி வடிவ மொழியாக
உருவெடுத்ததால் சேரல வம்சம் சேர்வையாக மட்டும்
தமிழ் நாட்டில் நின்று போனது!

-Sasi Bala-

20.8.14

மருதுபாண்டியர்களின் உடல்!

மருதுபாண்டியர்களின் உடல் இங்கு (திருப்பத்தூர் ஸ்வாடிஷ் மருத்துவமனை அருகில்) தான் அடக்கம் செய்யப்பட்டது என்பதற்கு இது தான் காலத்தால் அழியாத வரலாற்று சுவடு.

காளையார்கோவிலில் தான் அடக்கம் செய்தார்கள் என்பதற்கு அதிகாரப்பூர்வ அடையாளங்கள் எதுவுமே அங்கே இல்லையே.

அரசியல் சூழ்ச்சிகளை உடைத்து திருப்பத்தூரில் அக்டோபர் 24ல் நடைபெறும் அரசு விழா மற்றும் குருபூஜை விழாக்களில் கலந்து கொள்வோம்.

நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்த நம் முப்பாட்டன்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு மரியாதை செய்வோம்.

3.7.14

அகம் - ஆய்வு!

அறிவுசார் அகமுடையார் சான்றோரே!

இறை உருவாக்கிய அமிழ்தினும் இனிய தமிழ் ஒன்றில்தான் "உயிர்" எழுத்துக்கள். ஒவ்வொன்றும் வெற்று எழுத்தாய் இல்லாமல் பொருள் குறித்த சொல்லாக விளங்குகின்றன. சொல் ஒவ்வொன்றும் வெறும் குறியீடாய் இல்லாமல் சொல்லே பொருளாக விளங்குவது தமிழ் மொழி மட்டிலும்தான் என்பதை நாமறிவோம்.

அகம்படியர் (அகமுடையார்) என்னும் சொல்லில், அ என்பது என் அல்லது எட்டு(8) என்னும் எண்ணைத் தமிழ் மொழி மரபுப்படி குறிப்பதாகும். எட்டு வகைக் குணம் உடையவனே இறைவன்; திக்குகள் எட்டு, எண் அல்லது எனப்படும் சொல் எண்ணி (சிந்தித்து) ஆராய்ச்சி சொல்கிறது. எட்டு எனும் சொல் "அடைய முடியும் " (எட்டு) எனும் பொருள் உடையது.

க-க் + அ. சேர்ந்தது "க" "க்" என்பது தொடர் நிலையைக் குறிக்கும். "க" என்பது தமிழ் மொழி என் மரபுப்படி ஒன்று அல்லது முதன்மை நிலையைக் குறிக்கும்.

ம் என்பது மெளன நிலையினை அல்லது முற்றுப் பெற்ற பூரண நிலையைக் குறிக்கும்.

அகம் எனும் சொல் இகவாழ்வின் அனைத்துயும் தழுவி நிற்பதால் ஆக என் குணங்களை உடைய இறை முதன் முதலில் உருவாக்கிய எட்டுத் திசைகளிலும் மனித இனம் அல்லது மனித கனத்தைப் பல்கிப் பரவச் செய்தான். பூதகணம் போன்ற வேறு கணங்களைப் போல் தோன்றி வளர்ந்து மறைந்து போகும் கணமாய்ப் படைக்காமல் கண சமுதாயமாய் படைத்த இறைவனே தலைமையேற்று வழிகாட்டி, வெறும் சடப் பொருளான வாசி எனப்படும் மூச்சுக் காற்றினை முறையான பயிற்சி மூலம் சிவனுள்ள குண்டலினி சக்தி பெறச் செய்து இறைமை அல்லது "கடவுள் " நிலை எய்தச் பூரண நிலை எய்தி செய்தான் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். விளக்கமாக்க கூறின் மனித கணத்தின் படைப்பு தெளிவான நோக்கம் உடையதாகும்.

அதே போன்று தோன்றி வளர்ந்து மறைந்து போகும் உடல் படைத்த மனித கணம் அல்லது சமுதாயம், அரசியல், பொருளாதார ரீதியாக நிறை நல்வாழ்வு பெற்றாலும் அது ஆன்மீகப் பூரண நிலை அடைய அல்லது இறை நிலை அடைய வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சக்தியுள்ள சிவனாக, சிவனுள்ள சக்தியாக மாற முடியும். சிவசக்தியின் மண்ணுலக வெளிப்பாடே மனிதன். மண் உலகில் சிவ சக்தியின் மைந்தர்கள் ஆகிய நாம் நமது தொன்மையான புற உலகின் ஆன்மீகப் பூரண நிலையை அடைய எக்காலமும் முயன்று கொண்டே இருக்க வேண்டும். அதற்குப் படியாய் படிதல் உடையவராய் படிப்புடையவராய் இருக்க வேண்டும்.

20.6.14

பழம் நூல்கள் கூறும் அகமுடையார் வரலாறு

அகம்படிமைப் பதினாறாயிரவர் துதி:-

"மல்குபுகழ் நடராசன் வளர்கோயி லகலாது, பல்கிளைஞ ருடனுரிமைப் பணிசெய்யும் பரிவினராய்க், கல்விகளின் மிகுமெல்லைக் கருத்தினராய் நிருத்தனருட், செல்வமலி யகம்படிமைத் திறலினர்தம் பதம்போற்றி...."

- என்று அகமுடையார் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

இப்பாடலின் கருத்து:-

மிகுந்தும் சொல்லும் சிவகீர்த்தியையுடைய நடேச மூர்த்தியின் சிவதர்மம் வளரும் திருக்கோயிலை நீங்காமல் பல கிளைஞருடனே தங்களுக்கு. அமைந்த ஊழியங்களைப் பரிவுடனே செய்யும் பக்திமான்களும், கல்விகளினாலே மிகுந்த நிலையான கருத்தை உடையவர்களும், தம்பிரானாருடைய அருளாகிய சம்பத்து மிகுந்த ஞானவீரத்தை உடையவர்களுமாகிய திருவகம்படியரான பதினாறாயிரவர் திருவடிகள் போற்றி!

ஆதாரம்: பொது ஆண்டு 1313ல் உமாபதி சிவாச்சாரியார் எழுதிய "கோயிற்புராணம்" நூலில் இருந்து...