அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

3.7.14

அகம் - ஆய்வு!

அறிவுசார் அகமுடையார் சான்றோரே!

இறை உருவாக்கிய அமிழ்தினும் இனிய தமிழ் ஒன்றில்தான் "உயிர்" எழுத்துக்கள். ஒவ்வொன்றும் வெற்று எழுத்தாய் இல்லாமல் பொருள் குறித்த சொல்லாக விளங்குகின்றன. சொல் ஒவ்வொன்றும் வெறும் குறியீடாய் இல்லாமல் சொல்லே பொருளாக விளங்குவது தமிழ் மொழி மட்டிலும்தான் என்பதை நாமறிவோம்.

அகம்படியர் (அகமுடையார்) என்னும் சொல்லில், அ என்பது என் அல்லது எட்டு(8) என்னும் எண்ணைத் தமிழ் மொழி மரபுப்படி குறிப்பதாகும். எட்டு வகைக் குணம் உடையவனே இறைவன்; திக்குகள் எட்டு, எண் அல்லது எனப்படும் சொல் எண்ணி (சிந்தித்து) ஆராய்ச்சி சொல்கிறது. எட்டு எனும் சொல் "அடைய முடியும் " (எட்டு) எனும் பொருள் உடையது.

க-க் + அ. சேர்ந்தது "க" "க்" என்பது தொடர் நிலையைக் குறிக்கும். "க" என்பது தமிழ் மொழி என் மரபுப்படி ஒன்று அல்லது முதன்மை நிலையைக் குறிக்கும்.

ம் என்பது மெளன நிலையினை அல்லது முற்றுப் பெற்ற பூரண நிலையைக் குறிக்கும்.

அகம் எனும் சொல் இகவாழ்வின் அனைத்துயும் தழுவி நிற்பதால் ஆக என் குணங்களை உடைய இறை முதன் முதலில் உருவாக்கிய எட்டுத் திசைகளிலும் மனித இனம் அல்லது மனித கனத்தைப் பல்கிப் பரவச் செய்தான். பூதகணம் போன்ற வேறு கணங்களைப் போல் தோன்றி வளர்ந்து மறைந்து போகும் கணமாய்ப் படைக்காமல் கண சமுதாயமாய் படைத்த இறைவனே தலைமையேற்று வழிகாட்டி, வெறும் சடப் பொருளான வாசி எனப்படும் மூச்சுக் காற்றினை முறையான பயிற்சி மூலம் சிவனுள்ள குண்டலினி சக்தி பெறச் செய்து இறைமை அல்லது "கடவுள் " நிலை எய்தச் பூரண நிலை எய்தி செய்தான் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். விளக்கமாக்க கூறின் மனித கணத்தின் படைப்பு தெளிவான நோக்கம் உடையதாகும்.

அதே போன்று தோன்றி வளர்ந்து மறைந்து போகும் உடல் படைத்த மனித கணம் அல்லது சமுதாயம், அரசியல், பொருளாதார ரீதியாக நிறை நல்வாழ்வு பெற்றாலும் அது ஆன்மீகப் பூரண நிலை அடைய அல்லது இறை நிலை அடைய வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சக்தியுள்ள சிவனாக, சிவனுள்ள சக்தியாக மாற முடியும். சிவசக்தியின் மண்ணுலக வெளிப்பாடே மனிதன். மண் உலகில் சிவ சக்தியின் மைந்தர்கள் ஆகிய நாம் நமது தொன்மையான புற உலகின் ஆன்மீகப் பூரண நிலையை அடைய எக்காலமும் முயன்று கொண்டே இருக்க வேண்டும். அதற்குப் படியாய் படிதல் உடையவராய் படிப்புடையவராய் இருக்க வேண்டும்.