அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

26.12.13

திரை இயலறிந்த கொற்றவர் பெரிய மருதுபாண்டியர்

குதிரைகள் பாடகம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம், புரவி என எட்டு வகைப்படும். இவற்றில் இவுளி வகை குதிரைகள் போர்க்காலத்தின்போது வாள், ஈட்டி, கத்தி ஆகியவை வெட்டித்தாக்கினாலும் அவற்றை எதிர்த்துப் போரிடும். பின்வாங்காமல் எதிர்த்து நிற்கும்."இந்த ஜாதிக் குதிரையைத்தான் சிவகங்கை சமஸ்தானப் பாளையாதிபதி பெரிய மருதுபாண்டியர் வைத்திருந்தார். அதேப்போல் குதிரையைத் தேர்வு செய்வதிலும் பெரிய மருதுபாண்டியர் திறமையானவர்.

ஒருமுறை குதிரை வியாபாரி ஒருவன் பெரிய மருதுபாண்டியரிடம் தன்னிடம் இருக்கக்கூடிய அரபுக்குதிரைக்கு இணையான குதிரை எங்குமில்லை என்று தனக்கேயுரிய வாய்ச்சாலத்துடன் விவரித்தான்.

பெரிய மருதுபாண்டியர் சற்றேறக்குறைய தள்ளி நின்றுக்கொண்டு 'எங்கே நான் நிற்குமிடத்திற்கு உன் குதிரையை வரச்சொல் 'என்றார்.

'ஓ! தாராளமாக 'என்றவன் குதிரையைத் தட்டிவிட்டான்.

என்ன வேடிக்கை!

குதிரை அசைய மறுத்து அங்கேயே நின்றது.

பொறுமையிழந்த வியாபாரி குதிரை மீது சவுக்கைச் சொடுக்கினான்.

அப்போதும் அது நகர்வதாகயில்லை.

எப்படி நகரும்?

பெரிய மருதுபாண்டியர் வியாபாரி டம் உரையாடிக் கொண்டிருந்தபோதே, குதிரையை தட்டிக்கொடுக்கும் பாவனையில் குதிரையின் முக்கியமான ஒரு நரம்பைத் தொட்டுவிட்டார்.

அவர் தொடு வர்மக்கலையில் வல்லவர் என்பதை வியாபாரி அறிந்திருக்க முடியாது. குதிரையை அதிக விலைக்கு விற்க ஆசைப்பட்டே அவ்வாறு கூறினான் வியாபாரி. பின்னர் நியாயமான விலைக்கொடுத்து அதை வாங்கும்படி தம் அலுவலரிடம் பணித்தார் பெரிய மருதுபாண்டியர்.

நன்றி :- அகம் பாசறை

13.12.13

முதற் நேதாஜி சிலை!


இந்தியாவின் முதல் நேதாஜி சிலையை சிவகங்கையில் அமைத்தவர் திரு.சுந்தர்ராஜன் சேர்வை. 1944 யில் இந்திய தேசிய இராணுவம் மணிப்பூரில் இம்பால் வழியாக இந்தியாவில் நுழைந்ததன் வெற்றியைக் குறிப்பதற்காக அச்சிலை நிறுவப்பட்டது. 1946யில் நேதாஜி பிறந்தநாள் அன்றே சிலையை திறந்து வைத்தார் சுந்தர்ராஜன் சேர்வை.

நன்றி : நேதாஜி மாத இதழ்

4.12.13

அகமுடையார் குலத்தில் உதித்த பாம்பன் சுவாமிகள்

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்:

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ( English : Pamban Gurudasa Swamigal ) , (பி.1850-52அ,இ.மே 30,1929) தமிழ்நாட்டில் இராமேசுவரம் தீவில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பழந்தமிழ்க் குடியான #அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக 1850 ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். 1866 ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.

இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது மதுரை சின்னக் கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர்.

1894ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப்பயணங்கள் மேற்கொண்டார். அப்போது அவருடன் பழகிய திரு. வி. க இவ்வாறு கூறுவார்:

"குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்" திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127.

1923ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்த சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததாக அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார்கள். சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலாமாக எடுத்து வரப்பட்டு மே 31 , 1929 திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.
சுவாமிகள் இயற்றிய பாடல்கள்
Search Wikisource விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:
சண்முக கவசம்

சண்முக கவசம்
பஞ்சாமிருத வண்ணம்
குமரகுருதாச சுவாமிகள் பாடல் - 1266
ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) - 1192
திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) - 1135
திருப்பா (திட்ப உரை) - 1101
காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) - 608
சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) - 258
சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் - புலால் மறுப்பு) - 235
பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) - 230
செக்கர் வேள் செம்மாப்பு - 198
செக்கர் வேள் இறுமாப்பு - 64
தகராலய ரகசியம் (சதானந்த சாகர உரை)- 117
குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி - 100
சேந்தன் செந்தமிழ் (வடமொழி கலவாத் தனித் தமிழ்)- 50
குமாரஸ்தவம் 44
தென்னாட்டுத் திருத்தலதரிசனம் (கட்டளைக் கலித்துறை) 35
பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) 30
ஆனந்தக்களிப்பு 30
சமாதான சங்கீதம் 1
சண்முக சகச்சிர நாமார்ச்சனை 2
ஆகப் பாடல்கள் 6666