அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

14.2.14

தமிழ்புலி மருதரசர்

ஒருமுறை புலிக்குட்டிப்புலவர் எனும் ஒரு புலவர் மருதுபாண்டியர் அரண்மனை நோக்கி வந்தார்.புதிதாக பணியிலிருந்த வாயிற்காப்போன் "அரசரிடம், யார் வந்திருப்பதாகச் சொல்ல? என்று கேட்டான்.
புலவர் அதட்டலாகவும் ஏளனமாவும் "அரசனிடம் புலி வந்திருக்கிறதென்று சொல் "என்று சொல்லி அனுப்பினாராம். வாயிற்காப்போனும் அவ்வாறே அரசனிடம் தெரிவித்தான்.பெரிய மருதுபாண்டியர் இதற்கெல்லாம் அசறுபவரா? அவரும் 'இங்கு வேல் இருக்கிறதென்று சொல்லி, வரச்சொல் என்றாராம்.முத்து வேலுக்கவிராயர் தம் அவையில் இருப்பதைக் குறிப்பால் உணர்த்தினார் பெரிய மருதுபாண்டியர். மன்னர் புலியை அடக்குவதில் மட்டும் வல்லவரல்லர் தமிழிலும் புலி எனப் புரிந்து கொண்ட புலவர் தம் செருக்கடங்கினார்.

நன்றி: மு.இரா.கலைச் செல்வன்

No comments:

Post a Comment