அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

2.2.14

யார்?



1772 ல் முத்துவடுகநாதர் இறந்த பின்பு வேலு நாச்சியாரின் உயிரையும் , மானத்தையும் கடைசி வரை காத்தது யார் ?

சிவகங்கை சீமையில் இருந்து டோலி மூலம் திண்டுக்கல் வரை வேலு நாச்சியாரை பாதுகாப்பாக கொண்டு சேர்த்து , மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் அறிமுகப்படுத்தி அடைக்கலம் தந்தது யார்..?

சிவகங்கை சீமையை மீட்டெடுக்க ரகசியமாக புரட்சி படை திரட்டியது யார்..?


வேலு நாச்சியார்க்கு 1772 முதல் 1780 வரை திண்டுக்கல்லிலும் , விருபாட்சியிலும் போர் பயிற்சி தந்தது யார்..?

சிவகங்கை சீமையை மீட்க போதிய பணம் இல்லாத காரணத்தால் , திருவிதாங்கூர் மன்னர் நடத்திய போட்டியில் வேங்கை புலியை வென்று , அதன் மூலம் கிடைத்த பணத்தை ஆற்காடு நவாபிடம் கொடுத்து சிவகங்கை சீமையை மீட்டது யார்..?

வெள்ளையரால் தோற்கடிக்கப்படாத ஒரே ராணி வேலு நாச்சியார் என்ற பெருமைக்கு காரணம் யார்..?

அவரை அறிவாலும் , வீரத்தாலும் வழி நடத்தியது யார்..?

தன் நாட்டையும், அரச பதவியையும் வேலு நாச்சியார் ஒப்படைக்கும் அளவிற்கு அறிவு,வீரம்,நிர்வாகம்,போர் திறன்,ஆளுமை அனைத்திலும் சிறந்து விளங்கி உயர்ந்திருந்தது யார்..?

இன்று வரை சிவகங்கை என்னும் சமஸ்தானம் இருப்பதற்கு காரணம் யார்..?

இவர்கள் இல்லையென்றால் 1772ம் ஆண்டோடு சிவகங்கையும்,அதன் அரச வம்சமும் முடிவுக்கு வந்திருக்கும்.

நன்றி மறப்பது நன்றன்று.

No comments:

Post a Comment